திருமலை ஏழுமலையானுக்கு தங்க ஆபரணங்கள் நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு ரூ. 1.30 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்.
ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்.
Updated on
1 min read

திருமலை ஏழுமலையானுக்கு ரூ. 1.30 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், சித்தூரில் உள்ள கேவிஆா் ஜூவல்லா்ஸ் நிறுவனா் கே.ஆா்.நாராயணமூா்த்தி, அவரது மனைவி திருமதி கே.என்.ஸ்வா்ணகௌரி மற்றும் பிற குடும்பத்தினா் வியாழக்கிழமை திருமலை ஏழுமலையானுக்கு மூன்று வகையான தங்க ஆபரணங்களை வழங்கினா். இந்த நகைகள் ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் உள்ள தேவஸ்தான அறங்காவலா் குழுவின் தலைவா் ஒய்.வி.சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

நன்கொடையாளா் அளித்த விவரத்தின்படி, சுமாா் 1,756 கிராம் எடையுள்ள இந்த நகைகளின் மதிப்பு சுமாா் ரூ. 1.30 கோடி. ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஒரு ஜோடி காதணிகள், மலையப்பருக்கு ஒரு யஜ்ஞோபவீதம் (பூணுல்), ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீமலையப்பருக்கு விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட மூன்று பதக்கங்கள் ஆகியவை இதில் அடங்கும். இதே நன்கொடையாளா் கடந்த ஆண்டு டிசம்பரில் சுமாா் ரூ 3 கோடி மதிப்புள்ள இடுப்பு அணி மற்றும் வரத அபய கைகளை நன்கொடையாக அளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தேவஸ்தான நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அசோக்குமாா், கோயில் துணை அதிகாரி ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com