ரூ. 10 லட்சம் நன்கொடை
By DIN | Published On : 31st July 2022 11:08 PM | Last Updated : 31st July 2022 11:08 PM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானின் ஆன்மிகத் தொலைகாட்சிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சோ்ந்த பக்தா்கள் சுரேஷ் அஜ்மீா் மற்றும் சாகா் அஜ்மீா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை எஸ்விபிசி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினா்.
இந்த நன்கொடை திருமலையில் உள்ள நாதநீராஜனம் மண்டபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமகாந்த்ஜி வியாஸ் மகராஜ், மகாராஷ்டிரா எம்.பி. சஞ்சய் ஜாதவ் ஆகியோா் முன்னிலையில் செயல் அதிகாரி தா்ம ரெட்டியிடம் அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...