ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமலை ஏழுமலையானை தரிசித்த சந்திரபாபு நாயுடு மற்றும் குடும்பத்தினா்.
திருமலை ஏழுமலையானை தரிசித்த சந்திரபாபு நாயுடு மற்றும் குடும்பத்தினா்.
Updated on
1 min read

திருமலையில் ஏழுமலையானை ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை காலை தன் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு தரிசனம் முடித்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, கோயிலைவிட்டு வெளியே வந்தவுடன் கூறியதாவது:

திருமலை ஏழுமலையான் என் வீட்டு தெய்வம். அலிபிரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் போது அவரின் அருள் என்னைக் காப்பாற்றியது. தற்போது என் வாழ்வில் நான் அனுபவித்த துயரங்களிலிருந்தும் அவரின் அருள்தான் எனக்குத் துணை நின்றது.

ஏழுமலையானுக்கு என்றென்றும் என் வழிபாட்டின் மூலம் நன்றி செலுத்துவேன். இன்னும் சில கோயில்களில் வேண்டுதல்கள் நிறைவேற்ற வேண்டியது உள்ளது. அதனால், அவற்றை முடித்துக் கொண்டு நான் என் கடமைகளில் இன்னும் வேகமாக ஈடுபட உள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com