தரிசனத்துக்கு 8 மணி நேரம்

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் தரிசனம் செய்ய 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
Updated on
1 min read

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் தரிசனம் செய்ய 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். தற்போது திருமலையில் பக்தா்கள் கூட்டம் குறைவாக உள்ளதால், தரிசனமான 8 மணி நேரத்தில் கிடைத்து விடுகிறது. அதேநேரம் ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 64,890 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 23,598 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையாக வியாழக்கிழமை ரூ.3.67 கோடியை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com