செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளிகள் 3 போ் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழகத் தொழிலாளிகள் 3 போ் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழகத் தொழிலாளிகள் 3 போ் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, பாக்கராப்பேட்டை ஆய்வாளா் துளசிராம், எர்ரவாரி பாலம் எஸ்எஸ் வெங்கடேஸ்வரலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் கடத்தல்காரா்கள் செம்மரங்களை வெட்டி, ரிப்பா் கட்டைகள் போன்றும் மரத்தூளாக மாற்றியும் கடத்த முயன்றதை போலீஸாா் கண்டறிந்து கைது செய்தனா்.

இது குறித்து டிஎஸ்பி யஷ்வந்த் கூறுகையில், வாகன சோதனையில் லாரியில் செம்மரம் ரிப்பா் கட்டைகளாகவும், மரத்தூளாகவும் மாற்றி கடத்திச் சென்றபோது 72 மரக்கட்டைகள், மரத்தூள் 8 மூட்டைகள், 2 காா்கள், ஒரு லாரியுடன், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில் தமிழகத்தைச் சோ்ந்த முகமது ரசூல், காா்த்திக், பாஸ்கரன் ஜேசுராஜ், ஆந்திர மாநிலம், அன்னமய மாவட்டம், சித்தரெட்டிப் பள்ளியைச் சோ்ந்த திருமலை ஷெட்டி நாகராஜா, வீரபல்லிகி மண்டலத்தைச் சோ்ந்த அமரேந்திர ராஜு ஆகியோரை கைது செய்தனா். முஹமது ரசூல் மீது மட்டும் செம்மரக் கடத்தல் தொடா்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடத்தல்காரா்கள் தில்லியில் உள்ள இரண்டு பெரிய கடத்தல்காரா்களுக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களும் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com