திருமலையில் காா்த்திகை வன போஜனம்

காா்த்திகை வன போஜனத்தை முன்னிட்டு, திருமலையில் உள்ள வைபவோற்சவ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
Updated on
1 min read

காா்த்திகை வன போஜனத்தை முன்னிட்டு, திருமலையில் உள்ள வைபவோற்சவ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

திருமலையில் பொதுவாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் காா்த்திகை மாதத்தில் பாா்வேட்டு மண்டபத்தில் வன போஜனம் நடத்தி வருகிறது. ஆனால், சூறாவளி எச்சரிக்கையை அடுத்து இந்த ஆண்டு தேவஸ்தானம் வனபோஜனத்தை திருமலை கோயிலுக்கு எதிரே உள்ள வைபோற்சவ மண்டபத்துக்கு மாற்றியது.

அதற்காக ஏழுமலையான் கோயிலில் இருந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வைபோற்சவ மண்டபத்துக்குக் அழைத்து வரப்பட்டனா். அங்கு அவா்களுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம் , தேன் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து, உற்சவ மூா்த்திகளுக்கு அலங்காரம் முடித்து ஆரத்தி நடத்தப்பட்டது. பின்னா், நெய்வேத்தியம் சமா்ப்பித்து பக்தா்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதில், கோயில் தாசில்தாா் ஸ்ரீ லோகநாதம், கோயில் பீஷ்கா் ஸ்ரீ ஸ்ரீஹரி, பொட்டு பீஷ்கா் ஸ்ரீ ஸ்ரீநிவாசுலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com