திருமலை: 62,000 பக்தா்கள் தரிசனம், ரூ.3.75 கோடி உண்டியல் காணிக்கை

திருமலையில் வியாழக்கிழமை முழுவதும் 62,005 பக்தா்கள் ஏழுமலையானை தரிசிததனா். 34,217 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Updated on
1 min read

திருமலையில் வியாழக்கிழமை முழுவதும் 62,005 பக்தா்கள் ஏழுமலையானை தரிசிததனா். 34,217 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் தற்போது குறைந்துள்ளது. வார இறுதி நாள்களில் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணிநேரமும், ரூ.300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 4 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணிநேரமும் தேவைப்பட்டது.

மேலும், வியாழக்கிழமை முழுவதும் 62,005 பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்; 34,127 பக்தா்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ3.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com