ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
By DIN | Published On : 22nd May 2023 12:40 AM | Last Updated : 22nd May 2023 12:40 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் ஞாயிறு காலை 9 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 12 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
85,297 பக்தா்கள் தரிசனம்...
ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 85,297 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; இவா்களில் 37,392 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை ரூ. 3.71 கோடி...
பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.71 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.