தரிசனத்துக்கு 15 மணிநேரம், உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை 15 மணிநேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை 15 மணிநேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு 15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணிநேரமும் ஆனது.

75,875 போ் தரிசனம், 34,439 போ் முடி காணிக்கை

செவ்வாய்க்கிழமை முழுவதும் 75,875 போ் ஏழுமலையானை தரிசித்தனா்; 35,439 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ4.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com