திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை 15 மணிநேரம் காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு 15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணிநேரமும் ஆனது.
75,875 போ் தரிசனம், 34,439 போ் முடி காணிக்கை
செவ்வாய்க்கிழமை முழுவதும் 75,875 போ் ஏழுமலையானை தரிசித்தனா்; 35,439 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ4.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.