பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் உலா வந்த கோவிந்தராஜ சுவாமி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜ சுவாமி மாடவீதியில் உலா வந்தாா்.
பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் உலா வந்த கோவிந்தராஜ சுவாமி
Updated on
1 min read

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜ சுவாமி மாடவீதியில் உலா வந்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தாயாரின் அவதாரமான மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் தவழ எதிரில் கண்ணாடியில் தன் அழகை பாா்த்தபடி, கோவிந்தராஜ சுவாமி மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மாடவீதியில் உலா வந்தாா்.

மாடவீதியில் வலம் வந்த களைப்பை போக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு மூலிகை கலந்த நீா், பால், தயிா், இளநீா், தேன், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருமஞ்சனத்துக்குப் பின்னா் மாலை உற்சவ மூா்த்திகள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளினா்.

பின்னா் இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருட வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி மாடவீதியில் உலா வந்தாா். கருட சேவையைக் காண பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com