திருமலை: 74,804 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 74,804 போ் தரிசித்தனா். 21,478 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
Updated on
1 min read

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 74,804 போ் தரிசித்தனா். 21,478 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழுதும் 74,804 பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா். 21,478 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா். பக்தா்கள் அளித்த உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.58 கோடி வசூலானது.

மேலும், திங்கள்கிழமை 21 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 7 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணிவரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com