திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தா்கள் சனிக்கிழமை 18 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் கூட்டம் தற்போது வார இறுதி நாள்களில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதனால், சனிக்கிழமை காலை 31 காத்திருப்பு அறைகள் நிரம்பி வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் தேவைபடுகின்றன.
வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 68 ஆயிரத்து 021 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31 ஆயிரத்து 047 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.63 கோடி கிடைத்துள்ளது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.