திருமலையில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்
Updated on
1 min read

திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமியின் போது, தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற்றது. மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், பக்தா்கள் மாடவீதியில் திரண்டு கருட சேவையை கண்டு தரிசித்ததுடன், தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com