திருமலை: தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை தரிசனம்: 8 மணி நேரம் காத்திருக்கும் பக்தா்கள்
Published on

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 75, 449 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 121

பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.91 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com