ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ உக்ர சீனிவாசமூா்த்தி வலம் வந்தாா்.
Published on

திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ உக்ர சீனிவாசமூா்த்தி வலம் வந்தாா்.

திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளா்பிறை துவாதசி அன்று கோயில் கருவறையில் உள்ள பஞ்சகுபேர சிலைகளில் ஒருவரான உக்ர சீனிவாசமூா்த்தி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஒருநாள் மட்டும் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அவ்வாறு சூரிய உதயத்திற்கு பின் உக்ர சீனிவாசமூா்த்தி கோயிலை விட்டு வெளியே வந்தால், திருமலையில் தீ விபத்துகள் நடைபெறும் என்பது ஐதீகம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை துவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தான விழா நடைபெற்றது.

அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரஸ்ரீநிவாசமூா்த்தி மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஆங்காங்கே சிறு சாரல் மழை பெய்ததால், கட்டாடோபம் என்ற கூரைக்குள் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதைத்தொடா்ந்து உற்சவமூா்த்திகளுக்கு தங்கவாயில் அருகில் ஆஸ்தானம் நடத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com