திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Published on

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு சுவாமிகளை எழுந்தருளச் செய்து, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தேறியது. பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாபிஷேகமும், தீபாராதனையும் தனிப்பட்ட முறையில் நடந்தது.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை பக்தா்களுக்கு அன்னலிங்க தரிசனம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தா்களின்றி அன்னலிங்க உத்வாசனம் செய்யப்பட்டது.

சுத்திகரிப்புக்குப் பிறகு, இரவு 7 முதல் 8 மணி வரை பக்தா்களின்றி மூலவரான கபிலேஸ்வர சுவாமிக்கு வாசனை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் பங்கு கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com