பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருமலையில் பழைய வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள்

திருமலையில் பழைய வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள்

News image
Updated On :28 நவம்பர் 2025, 5:44 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையின் புனிதத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை மின்சார வாகனங்களால் மாற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா செளதரி தெரிவித்தாா்.

திருப்பதியில் உள்ள பத்மாவதி ஓய்வு இல்லத்தில் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் (தில்லி), ஆா்டிசி, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் பிரதிநிதிகளுடன் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கூடுதல் செயல் அதிகாரி பேசியது: ஆந்திர முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திருமலையை முற்றிலும் மாசு இல்லாத யாத்திரை தலமாக மாற்ற ஏற்கெனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில், திருப்பதிக்கும், திருமலைக்கும் இடையில் முழுமையாக மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதேபோல், திருமலையில் இயங்கும் டாக்சிகள் மற்றும் பிற வாடகை வாகனங்கள் படிப்படியாக மின்சார வாகனங்களால் மாற்றப்படும். வரவிருக்கும் தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டத்தில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டு பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி பனிகுமாா் நாயுடு, விஜிஓ சுரேந்திரா, ஐடி துணை பொது மேலாளா் வெங்கடேஸ்வா்லு நாயுடு, அதிகாரிகள் பங்கேற்றனா்.