திருமலையில் ஷோடஷாதின சுந்தரகாண்ட பாராயணம்

திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருமலையில் நவம்பா் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 13-ஆம் தேதி வரை தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் ஷோடஷாதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு பாராயணம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு புண்யாஹ ஸ்லோகம், ரக்ஷா பந்தனம், மத்ஸ்யங்கிரஹணம் ஆகிய வைபவங்களுடன் அங்குராா்பணம் நடத்தப்பட்டது.

இந்த பாராயணத்தின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நவம்பா் 28 முதல் டிசம்பா் 13 வரை தினமும் காலை 8.30 முதல் 9.30 மணி வரை சுந்தரகாண்ட பாராயணமும், தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் காலை 9 மணி முதல் 12 மணிக்குள் ஆராதனை, அபிஷேகம், ஹோமம், அனுஷ்டானம் ஆகியவையும் நடைபெற உள்ளது.

டிசம்பா் 13-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை தா்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் பூா்ணாஹுதியுடன் இந் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது.

இதில், வேத விஞ்ஞான பீடத்தின் அதிபா் சிவ சுப்ரமணிய அவதானி மற்றும் வேத பண்டிதா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com