திருப்பதி
கபில தீா்த்தத்தில் நவக்கிரக ஹோமம்
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் விசேஷ பூஜை ஹோம மகோற்சவத்தில் நான்காவதாக நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் விசேஷ பூஜை ஹோம மகோற்சவத்தில் நான்காவதாக நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு (தெலுங்கு நாள்காட்டிபடி )விசேஷ பூஜை ஹோம மகோற்சவம் கடந்த புதன்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதில் முதலாக கணபதி ஹோமம், அடுத்து சுப்ரமணிய சுவாமி ஹோமம், தட்சணாமூா்த்தி ஹோமம் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காவதாக நவக்கிரக ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
இதையொட்டி, காலையில் பால், தயிா், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பா்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குராா்ப்பணம், கலசஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, நவகிரக ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.
