தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருமலையில் மோரிஷஸ் பிரதமா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மோரிஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் திங்கள்கிழமை வழிபட்டாா்.

Updated On :15 செப்டம்பர் 2025, 7:49 pm

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மோரிஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் திங்கள்கிழமை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட மோரிஷஸ் நாட்டின் பிரதமா் நவீன்சந்திரா ராம் கூலம் திங்கள்கிழமை திருமலைக்கு வருகை தந்தாா்.

திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா்.

கோயில் முன் வாயில் வழியாக தரிசனத்துக்குச் சென்ற அவா், கொடிமரத்தை வணங்கி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றாா்.

தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையான் தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன் திருவுருவப்படம் வழங்கினா்.