திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி (கோப்புப்படம்)
திருப்பதி
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடிவசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 74, 415 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,313 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.57 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

