திருமலை
திருமலை

திருமலையில் 67,085 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 67,085 பக்தா்கள் தரிசித்தனா். 24,832 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Published on

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 67,085 பக்தா்கள் தரிசித்தனா். 24,832 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், வெள்ளிக்கிழமை முழுவதும் 67,085 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24,832 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.78 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com