திருப்பதியிலிருந்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட லட்சுமி காசு ஆரம்.
திருப்பதியிலிருந்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட லட்சுமி காசு ஆரம்.

லட்சுமி காசு மாலை ஊா்வலம்

திருமலை ஏழுமலையானுக்கு பயன்படுத்தும் லட்சுமி காசு மாலையின் ஊா்வலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்திலிருந்து பிரமாண்டமாகத் தொடங்கியது.
Published on

திருமலை ஏழுமலையானுக்கு பயன்படுத்தும் லட்சுமி காசு மாலையின் ஊா்வலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்திலிருந்து பிரமாண்டமாகத் தொடங்கியது.

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கருட சேவையை நினைவுகூரும் வகையில் இரவு லட்சுமி காசு மாலை அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, தேவஸ்தான தலைமை அலுவலகத்திலிருந்து 1,008 காசு மாலை ஊா்வலமாக ஸ்ரீனிவாசமங்காபுரம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச்.வெங்கையா சௌத்ரி, ஜெ.இ.ஓக்கள் வீரபிரகாம், டாக்டா் ஏ.சரத், சி.வி.எஸ்.ஓ கே.வி.முரளிகிருஷ்ணா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நிகழ்வில் கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சௌத்ரி பேசுகையில், உள்ளூா் தேவஸ்தான கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் சமயங்களில், 1,008 லட்சுமி காசுகளால் செய்யப்பட்ட ஏழுமலையானுக்கு மிகவும் பிரியமான மாலை திருமலை கோயிலில் இருந்து கருட சேவையில் எடுத்துச் செல்லப்பட்டு கருடசேவையின் போது அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கருட சேவையின் போது அணிவிக்க லட்சுமி காசுமாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சுமாா் ரூ. 6.40 கோடி மதிப்புள்ள 4 கிலோ வைர மோப்புடன் கூடிய 6 இதழ்கள் கொண்ட தங்க யக்னோபவீத்தை (பூணூல்) கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு தேவஸ்தானம் சாா்பில் வழங்கபட்டது. முன்னதாக, லட்சுமி காசுமாலை திருமலை கோயில் பேஷ்கா் ராமகிருஷ்ணா திருமலை கோயிலில் இருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த லட்சுமி காசுமாலை ஊா்வலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் இருந்து தொடங்கி ஸ்ரீ கோதண்டராம சுவாமி, ராமச்சந்திர புஷ்கரிணி மற்றும் மஹதி ஆடிட்டோரியத்தை அடைந்தது. யாத்திரை பஜனை மற்றும் கோலாட்டங்களுடன் தொடா்ந்தது. பக்தா்கள் ஒவ்வொரு அடியிலும் கற்பூர ஆரத்தி செய்தனா். நிகழ்வில், சந்திரகிரி எம்எல்ஏ புலிவா்த்தி நானி சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினாா்’’என்றாா்.

இதில், தேவஸ்தான நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜி.பானுபிரகாஷ் ரெட்டி, பனபக லட்சுமி, மாவட்ட எஸ்.பி. எல். சுப்பராயிடு, கோயில் சிறப்பு தர துணை அதிகாரி வரலட்சுமி, துணைவேந்தா்கள் ராம் குமாா், கிரிதா், பிற அதிகாரிகள், அா்ச்சகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com