

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் மாடவீதியில் சுவாமி எழுந்தருளினாா்.
திருப்பதி கபில தீா்த்தத்தில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமிக்கு சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை கபிலேஸ்வர சுவாமி சோமாஸ்கந்தமூா்த்தியாய் கல்ப விருட்ச வாகனத்திலும் காமாட்சி அம்மன் தனியாக திருச்சி வாகனத்திலும் வீதியுலா கண்டருளினா்.
பஜனை இசைக்குழுக்கள், பஜனைகள் மற்றும் மங்களகரமான வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், நகர வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இதில், குருக்கள் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா். பின்னா் மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு மாடவீதியில் உலா வந்தனா். இதில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.