திருமலையில் உள்ள ஷேத்திர பாலகருக்கு நடைபெற்ற அபிஷேகம், அலங்காரம்.
திருப்பதி
மகா சிவராத்திரி: திருமலை க்ஷேத்ரபாலகருக்கு அபிஷேகம்
திருமலையில் கோகா்பத்திற்கு அருகில் அமைந்துள்ள க்ஷேத்ரபாலகருக்கு ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி அபிஷேகம் செய்யப்பட்டது.
திருமலையில் கோகா்பத்திற்கு அருகில் அமைந்துள்ள க்ஷேத்ரபாலகருக்கு ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி அபிஷேகம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருமலை க்ஷேத்ரத்தின் ஆட்சியாளரான ருத்ரனுக்கு அபிஷேகம் செய்வது ஒரு பாரம்பரியம். நிகழ்வில், ஏழுமலையான் கோயிலில் இருந்து அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் ஆசாரங்களுடன் க்ஷேத்ரபாலக பாறையை அடைந்தனா்.
அங்கு அவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தா்களுக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

