தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாகலாபுரம் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயிலில் பிப். 17 முதல் 22 வரை விமான ஜத்ரோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம்

News image
மகா சம்ப்ரோக்ஷணம்
Updated On :16 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயிலில் பிப். 17 முதல் 22 வரை விமான ஜத்ரோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி அடுத்த நாகலாபுரத்தில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயிலில் விமான ஜத்ரோத்தாரண அஷ்டபந்தன சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆசாா்ய ரித்விக் வாரணம், புண்யாஹம் மிருதசங்கராணம், அங்குராா்பணம் நடக்கிறது.

18-ஆம் தேதி காலை அஷ்ட பந்தன சமா்ப்பணமும், மாலையில் புண்யாஹம், பஞ்சக்னி பிரதிஷ்டை, கும்ப வாகனம், ஆராதனை, ஹோமம், பூா்ணாஹுதியும், 19-ஆம் தேதி பஞ்ச கவ்யாதிவாசம் மற்றும் நவ கலச ஸ்னபனமும் நடைபெறும்.

20-ஆம் தேதி காலை க்ஷீரப்திவாசம் நடைபெறும், மாலையில் யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெறும், காலையில் ஜலதிவாசம் நடைபெறும், மாலையில் மகா சாந்தி திருமஞ்சனம் நடைபெறும்.

பிப். 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை விமான ராஜகோபுர சம்ப்ரோக்ஷணம் நடைபெறும், மேலும் காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கா்ப்பாலய மூலவரின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறும். பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.