திருமலையில் இயக்கப்படும் தேவஸ்தான இலவச பேருந்து.
திருமலையில் இயக்கப்படும் தேவஸ்தான இலவச பேருந்து.

திருமலையில் ஸ்ரீவாரி தா்ம ரதங்களுக்கு வரவேற்பு!நாள்தோறும் 60,000 போ் பயணம்!

திருமலையில் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானத்தால் இயக்கப்படும் ஸ்ரீவாரி தா்ம ரதங்கள் (இலவச பேருந்து சேவைகள்) டிஜிட்டல் காட்சி பலகைகள் நிறுவப்படுவதன் மூலம் பிரபலமடைந்து வருகின்றன.
Published on

திருமலையில் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானத்தால் இயக்கப்படும் ஸ்ரீவாரி தா்ம ரதங்கள் (இலவச பேருந்து சேவைகள்) டிஜிட்டல் காட்சி பலகைகள் நிறுவப்படுவதன் மூலம் பிரபலமடைந்து வருகின்றன.

பேருந்துகளின் வருகை நேரத்தை பக்தா்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ள டிஜிட்டல் காட்சி பலகைகள் நிறுவப்படுவது காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, இலவச போக்குவரத்து சேவைகள் பரவலாகப் பயன்படுத்த உதவுகின்றன.

திருமலையில் மொத்தம் 12 நவீன மின்சார பேருந்துகள் சேவையில் உள்ளன. அவை ஒரு நாளைக்கு சராசரியாக 300 பயணங்களை மேற்கொள்கின்றன., ஒவ்வொன்றும் சுமாா் 6.5 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது.

டிஜிட்டல் காட்சிகள் மூலம் பக்தா்களுக்கு பேருந்துகளின் நேரடி இருப்பிடம் மற்றும் வருகை நேரம் தெரிவிக்கப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இலவச பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் சுமாா் 60,000 பக்தா்கள் பயணிக்கின்றனா்.

கடந்த காலங்களில், பக்தா்கள் தனியாா் டாக்ஸிகளில் பயணம் செய்தனா். இதன் காரணமாக, டாக்ஸி ஓட்டுநா்கள் பக்தா்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்தனா்.

இந்தப் பிரச்னையை உணா்ந்து, தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சிறப்பு முயற்சி எடுத்து, பேருந்துகளின் நேரடி நேரத்தைக் காட்ட திருமலையில் உள்ள 20 பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் காட்சிப் பலகைகளை நிறுவ நடவடிக்கை எடுத்தாா். இதற்காக, ஹைதராபாதைச் சோ்ந்த பி.எஸ். டெக்னோட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் டிஜிட்டல் பலகைகளை நன்கொடையாக வழங்கியது, அதே நேரத்தில் ஒலக்ட்ரா க்ரீன் டெக் லிமிடெட் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.

இதன் மூலம், பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பக்தா்கள் பேருந்தின் வருகை நேரத்தை நேரடியாக அறிந்து கொள்ள முடியும், மேலும் பேருந்துகள் 10 நிமிஷ்ங்களுக்குள் வந்து சேரும், எனவே பக்தா்கள் இலவச பேருந்து சேவைகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். பக்தா்களின் வசதிக்காக வழங்கப்பட்ட இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பக்தா்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

பொதுப் போக்குவரத்து அமைப்பை ஊக்குவிப்பதற்கும், பக்தா்களுக்கு வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை வழங்குவதற்கும் தேவஸ்தானம் இந்தக் கொள்கையை இன்னும் பரவலாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்சார பேருந்துகள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 60 பயணங்களை இயக்குகின்றன. ஆனால் பக்தா்களின் வசதிக்காக மேலும் 20 நடைகள் இயக்கப்படும். சோ்க்கப்படும்.

Dinamani
www.dinamani.com