திருப்பதி
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.5.05 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி சா்வ தரிசனம் தொடங்கி உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே சிலாதோரணம் அருகே காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ..300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 88, 662 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24,417 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.5.05 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
