திருப்பதி
திருமலையில் 77,049 பக்தா்கள் தரிசனம், 21,469 போ் முடி காணிக்கை
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,049 பக்தா்கள் தரிசனம் செய்தனா், 21,469 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,049 பக்தா்கள் தரிசனம் செய்தனா், 21,469 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 77, 049 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 469 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

