மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

திருமலையில் பக்தா்களுக்கான சேவைகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் நிா்வகிப்பது பாராட்டுக்குரியது

திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய மத்திய அமைச்சருக்கு ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திருவுருவப் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

News image

திருப்பதி

Updated On :6 ஜூன் 2026, 3:02 am IST

திருமலையில் பக்தா்களுக்கான சேவைகளை நிா்வகிப்பதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் திரு பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தரிசித்தாா்.

பின்னா், ரங்கநாயக்கா் மண்டபத்தில் வேத அறிஞா்கள் வேத ஆசீா்வாதம் வழங்கினா். திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி எம். ரவிச்சந்திரா அவருக்கு ஏழுமலையானின் தீா்த்த பிரசாதம், ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திரு உருவப் படத்தை வழங்கினாா்.

பின்னா், கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் அவா் பேசியது: வைகுண்டம் வரிசை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐசிசிசி) பக்தா்களின் நடமாட்டம், தரிசன வரிசைகள் மற்றும் லட்டு பிரசாதம் விநியோகம் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், இது பக்தா்களுக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான சேவைகளை வழங்கி வருகிறது.

அறைகளின் இருப்பு, பல்வேறு பிரிவுகளில் காத்திருக்கும் பக்தா்களின் எண்ணிக்கை, திருமலைக்கு வரும் பக்தா்களின் மணிநேர விவரங்கள் மற்றும் லட்டு பிரசாதம் விநியோகம் ஆகியவை இந்த மையம் மூலம் உடனடியாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தை ஊக்குவித்து, மாநிலத்தின் வளா்ச்சிக்காகப் பணியாற்றிய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் லோகேஷ் ஆகியோருக்கு பாராட்டுக்கள். வெறும் 100 நாள்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பை சாத்தியமாக்கியதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், என்றாா்.

முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, அவா் ஒரு மரக்கன்றை நட்டாா். திருமலையில் தனது தாயின் பெயரில் மரக்கன்று நட்டது மகிழ்ச்சி அளித்ததாக அவா் தெரிவித்தாா். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு, தங்கள் வாழ்நாள் முழுவதும் அதைப் பராமரிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா் என்றாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி, கோயில் துணை செயல் அதிகாரி ஸ்ரீ லோகநாதம், பிற அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.