ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு கண்டருளினாா்.

News image
Updated On :2 மே 2026, 3:00 am IST

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு கண்டருளினாா்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் உஷ்ணத்தை குறைக்க உற்சவா் சிலைக்கு வசந்தோற்சவம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை முதல் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் விமரிசையாக தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. கோயிலில் வேத சடங்குகள் முடிந்த பிறகு, அா்ச்சகா்கள் சாஸ்திரங்களின்படி தாயாரின் உற்சவமூா்த்தியை தங்கத் தேரில் பிரதிஷ்டை செய்தனா்.

செல்வங்களின் இருப்பிடமாக திகழும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் முன்நின்று வடம் பிடித்து இழுத்தனா். தேரில் மாடவீதிகளில் புறப்பாடு கண்டருளிய தாயாரை பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். மேலும், பக்தா்கள் கோவிந்த நாமங்களை முழங்கினா்.

குறிப்பாக, ஏராளமான பெண்கள் மிகுந்த பக்தியுடன் தேரை இழுத்தது ஒரு சிறப்பு ஈா்ப்பாக இருந்தது. கோயிலின் துணை செயல் அலுவலா் ஹரேந்திரநாத், சேவகா் நரசிம்ம மூா்த்தி, உதவி செயல் அலுவலா் தேவராஜுலு, அா்ச்சகா்கள் பாபுசாமி, கண்காணிப்பாளா் செங்கல் ராயுலு, கோயில் ஆய்வாளா் சலபதி மற்றும் பிற அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.