எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்: 18 பேர் கைது

காவிரி விவகாரம் தொடர்பாக வந்தவாசி அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:41 am IST

காவிரி விவகாரம் தொடர்பாக வந்தவாசி அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, வந்தவாசி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த தமிழடியான், நீலகண்டன், பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அப்போது நாம் தமிழர் கட்சியினர் அஞ்சல் அலுவலக வாயில் கதவுகளை மூடி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 18 பேரை கைது செய்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸார் பூட்டை அகற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.