தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

நெல் ஏற்றும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் 

செங்கத்தில் நெல் ஏற்றும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:39 am IST

செங்கத்தில் நெல் ஏற்றும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் பெங்களூர் சாலை திருவள்ளூவர் நகர் வரை அதிகமான நெல் மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக நெல் மூட்டைகளை எடுத்து வரும் விவசாயிகள் மூட்டைகளை திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அடுக்கி விடுகின்றனர். 
பின்னர், மாலை நேரத்தில் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி நெல் மூட்டைகள் ஏற்றுகின்றனர். இப்படி ஏற்றுவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த பத்து நாள்களாக தொடரும் இந்த நிலையால், நகர மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
செங்கம் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.