செங்கத்தில் நெல் ஏற்றும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் பெங்களூர் சாலை திருவள்ளூவர் நகர் வரை அதிகமான நெல் மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக நெல் மூட்டைகளை எடுத்து வரும் விவசாயிகள் மூட்டைகளை திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அடுக்கி விடுகின்றனர்.
பின்னர், மாலை நேரத்தில் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி நெல் மூட்டைகள் ஏற்றுகின்றனர். இப்படி ஏற்றுவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த பத்து நாள்களாக தொடரும் இந்த நிலையால், நகர மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கம் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


