திருவண்ணாமலையில் ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.சீத்தாராமன், மாவட்டப் பொருளாளர் கே.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் வி.சுரேஷ் வரவேற்றார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சார்லஸ், மாநிலப் பொதுச் செயலர் வி.வேல்முருகன், மாவட்டத் தலைவர்கள் கவிச்செல்வன் (விழுப்புரம்), சரவணன் (வேலூர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இதரப் பணியாளர்களை ஒன்றிணைத்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஒரு லட்சம் பணியாளர்களைக் கொண்டு மிகப் பெரிய மாநில மாநாட்டை நடத்துவது, அந்த மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க
நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

மின் தடைகளை சரிசெய்ய 125 ரோந்து வாகனங்கள்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தொடங்கி வைத்தாா்

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்






