நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு என காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல நடிகர் ரவி மோகனின் வீடு உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், ரவி மோகனின் வீட்டில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையைத் திங்கள்கிழமை இரவு தொடர்புகொண்ட ஒருவர், ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்குச் சென்ற தனது மனைவியும், மகனும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த நீலாங்கரை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது ரவி மோகன் வீட்டுக்குள் இரு பெண்களும், ஒரு பெண்ணின் மகனான ஒரு சிறுவன் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ரவி மோகன் உள்பட அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ரவி மோகன் வீட்டில் சில தங்க நகைகள் திருட்டுப்போனதால் வீட்டில் பணியாற்றும் பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் யாராக இருந்தாலும் தாங்களாகவே விசாரணை நடத்தி ஒருவரை வீட்டில் தடுத்து வைக்கக்கூடாது என்றும், புகார் இருந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ரவி மோகன் வீட்டில் ரூ. 3 லட்சம் ரொக்கம், ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை ஆகியவை திருட்டுப்போயுள்ளதாக சென்னை நீலாங்காரை காவல்நிலையத்தில் ரவி மோகனின் மேலாளர் கோகுல் நேற்று (ஜூன் 23) புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் ரவி மோகன் வீட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டுப் போனதாகவும், அதனால் அவர் வீட்டில் பணியாற்றும் 2 ஓட்டுநர், உதவியாளர், பணிப்பெண், அவரது மகன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னை ரவி மோகன் நேற்று தனது வீட்டில் 2 பணிப்பெண்கள் அவரது மகனை சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Summary
A complaint has been lodged with the police regarding the theft of diamond jewelry worth ₹10 lakh and ₹3 lakh in cash from actor Ravi Mohan's house.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டு பணிப்பெண்களைச் சிறைப்பிடித்த ரவி மோகன்?
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல் வெளியீடு!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


