திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 851 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 851 மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த மனுக்கள் மீதும் ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகள் சார்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன், மாவட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலர் சா.ஆனந்தராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


