பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போளூரில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 1,789 கணினி உதவியாளர்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் முதுநிலை, இளநிலை பட்டம் பெற்றவர்கள்.
இவர்களில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேர் சிறு விடுப்பு எடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 30 சதவீத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்க வட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், செயலர் பாலமுருகன், அப்பதுரை, ஆறுமுகம், செண்பகம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

