பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போளூரில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 1,789 கணினி உதவியாளர்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் முதுநிலை, இளநிலை பட்டம் பெற்றவர்கள்.
இவர்களில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேர் சிறு விடுப்பு எடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 30 சதவீத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்க வட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், செயலர் பாலமுருகன், அப்பதுரை, ஆறுமுகம், செண்பகம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புரி ஜெகன்நாத்தை வாழ்த்திய விஜய் சேதுபதி!

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! தவெக

சிக்ஸர்கள் விளாச நான் பயிற்சி மேற்கொள்வதில்லை: பிரியான்ஷ் ஆர்யா

ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. பயணம்! ரூ. 44,490க்கு மின்சார ஸ்கூட்டர்!
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

