திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தியில் 315 மனுக்கள் வரப் பெற்றன.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிகழாண்டுக்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் (ஜமாபந்தி அலுவலர்)
பொ.ரத்தினசாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில், துரிஞ்சாபுரம், சொரந்தை, களஸ்தம்பாடி, சடையனோடை, மல்லவாடி, ஊசாம்பாடி, சானானந்தல், முனியந்தல், இனாம்காரியந்தல், காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, சின்னகல்லபாடி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்களை அளித்தனர்.
ஜமாபந்தியில் திருவண்ணாமலை வட்டாட்சியர் கு.மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், தனி வட்டாட்சியர்
இர.ரவி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

