கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறாததால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தீர்வு காணக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கப் பணியாளர்களும் திங்கள்கிழமை (மே 21) தொடர் விடுப்பு எடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளரும், திருவண்ணாமலை மாவட்டச் செயலருமான ஏ.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் சுமார் 4,500 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே பொறுப்பில் இருந்து வந்த நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் மே 8-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்கள் செயல்பட முடியாத அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
அதன்படி, மே 8-ஆம் தேதிக்குப் பிறகு சங்கங்களில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்ற இயலாததால் பயிர்க்கடன் வழங்குதல், நகைக் கடன் வழங்குதல், மகளிர் குழுக் கடன் வழங்குதல் உள்ளிட்ட எவ்வித கடன் வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள இயலவில்லை.
சங்கங்களுக்குரிய காசோலைகளின் மூலம் மத்திய வங்கியில் பணம் பெற இயலாததால் சங்கங்களில் இட்டு வைப்பு செய்துள்ள வைப்புதாரர்களுக்கு முதிர்வடைந்த வைப்புத் தொகையை திரும்ப வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சங்கத்தின் அன்றாட வரவு, செலவுகளை மேற்கொள்ளவும் இயலாத நிலை இருந்து வருகிறது.
பணியாளர், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வுகால நிதிப் பலன்கள் வழங்க இயலவில்லை. சங்கத்தின் இருப்பு பரிசோதனை அறிக்கை, ஆண்டு இறுதி தணிக்கை அறிக்கைகளில் நிர்வாகத்தால் முழுமையாக கையொப்பம் பெற்று வழங்க இயலவில்லை.
எனவே, இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, சங்கங்கள் தொய்வின்றி செயல்பட உரிய நடவடிக்கையை கூட்டுறவுத் துறை அமைச்சரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், தமிழக அரசும் எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ளோம்.
எனினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, திங்கள்கிழமை (மே 21) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் செயலர்களும் திங்கள்கிழமை (மே 21) முதல் தொடர் விடுப்பு எடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திங்கள்கிழமை (மே 21) காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

