போளூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக வரவேற்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜின் உத்தரவுப்படி, போளூர் காவல் நிலையத்தில் புதிதாக வரவேற்பாளர் நியமிக்கப்பட்டார். போளூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமங்களில் இருந்து புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு வரவேற்பாளர் உதவுவார். மேலும், புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களின் வருகை குறித்து வருகைப் பதிவேட்டில் பதிந்து கொள்வார்.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர் புகார் அளிக்க பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது, காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் தயாளன் டனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









