தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல்: 3 பேர் கைது

ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 9:31 am IST

ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளி தலைமையில் ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளர் பிரகாசம் மற்றும் போலீஸார் கச்சேரி ரோடு வழியாக ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சார்-பதிவாளர் அலுவலகம் அருகே வேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் மடக்கி விசாரித்தனர்.
 அப்போது, காரில் இருந்தவர்கள் திடீரென தப்பியோட முயன்றபோது போலீஸார் அவர்களைப் பிடித்தனர். பிறகு காரில் சோதனை செய்ததில் 750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிக் (21), அனிஸ் (20), சாணவாஸ் (22) ஆகிய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.