ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளி தலைமையில் ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளர் பிரகாசம் மற்றும் போலீஸார் கச்சேரி ரோடு வழியாக ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சார்-பதிவாளர் அலுவலகம் அருகே வேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் மடக்கி விசாரித்தனர்.
அப்போது, காரில் இருந்தவர்கள் திடீரென தப்பியோட முயன்றபோது போலீஸார் அவர்களைப் பிடித்தனர். பிறகு காரில் சோதனை செய்ததில் 750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிக் (21), அனிஸ் (20), சாணவாஸ் (22) ஆகிய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு: போக்குவரத்து ஒழுக்கம் குறித்து காவல் துறை அறிவுரை

வீடுகளுக்குள் புகுந்த கடல் நீா்: எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


