மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தூய்மையும் வாய்மையும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த சோகத்தூர் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் பா.சீனிவாசன், கீழ்ப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன் மற்றும் ம.சுரேஷ்பாபு, ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் ஐ.சுரேஷ் வரவேற்றார்.
தெள்ளாறு வட்டாரக் கல்வி அலுவலர் இல.ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
தெள்ளாறு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ஏ.நேரு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மன்னன், சுவாமிநாதன் மற்றும் பூபாலன், சதாசிவம், கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-என்பதுதான் எங்கள் வழி! - உதயநிதி ஸ்டாலின்
கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
