உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தூய்மையும் வாய்மையும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த சோகத்தூர் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:33 am IST

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தூய்மையும் வாய்மையும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த சோகத்தூர் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் பா.சீனிவாசன், கீழ்ப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன் மற்றும் ம.சுரேஷ்பாபு, ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் ஐ.சுரேஷ் வரவேற்றார்.
 தெள்ளாறு வட்டாரக் கல்வி அலுவலர் இல.ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
 தெள்ளாறு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ஏ.நேரு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மன்னன், சுவாமிநாதன் மற்றும் பூபாலன், சதாசிவம், கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.