/

கீழ்பென்னாத்தூரில் 420 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் நடத்திய

Updated On :3 செப்டம்பர் 2018, 1:15 am

கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வில் 420 லிட்டர்  எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில், மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி அசோக்குமார், மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா, கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் தனிப்படையினர் சனிக்கிழமை கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர மது விலக்கு தணிக்கையில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த காக்காபட்டி கொல்லைமேடு பகுதியில் உள்ள பெரியசாமிக்குச் சொந்தமான நிலத்தின் வழியே சென்றபோது, அந்த நிலத்தில் 
5 பிளாஸ்டிக் கேன்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 140 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சேகரை போலீஸார் கைது செய்தனர்.
280 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: 
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராம எல்லையில் உள்ள வீரமணிக்குச் சொந்தமான நிலத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு முள் புதரில் 8 கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 280 லிட்டர் எரிசாராயம், சாராயம் காய்ச்சப் பயன்படும் பேரல் அடுப்பு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இவற்றை மறைத்து வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் 2 நாள்களாக நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 420 லிட்டர் எரிசாராயம் 
பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.