செய்யாறு அருகே தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ தூசி கே.மோகன் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.
செய்யாறு வட்டம், மேல்மா கிராம காலனியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்குச் சொந்தமான குடிசை வீடு மின் கசிவு காரணமாக, கடந்த 8-ஆம் தேதி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
இதனையறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், வருவாய்த் துறை சார்பில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், அரிசி, வேட்டி, சேலை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்கி, ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியின்போது, முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன், வட்டாட்சியர் க.மகேந்திரமணி, வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் பிரபா,
அதிமுக நிர்வாகிகள் எம்.கே.கார்த்திகேயன், ராஜமாணிக்கம், கோதண்டன், சாந்தகுமார்
ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


