பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தேசிய வாக்காளர் தின ஆலோசனைக் கூட்டம்

செய்யாறில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 9:50 am IST

செய்யாறில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆர்.அன்னம்மாள் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.மகேந்திரமணி முன்னிலை வகித்தார். வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர் சுகுமாரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு வட்டத்தின் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் அனைவருக்கும் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற சுவரொட்டிகள், சட்டையில் அணியும் வில்லைகள் (பேட்ஜ்கள்), சிறிய விளக்கவுரை புத்தகங்கள் ஆகியவை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டன. 
இதில், செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.