

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பல்லி, மேலப்பட்டு கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
பல்லி கிராமத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.
எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார மாவட்ட துணை இயக்கு நா் அஜித்தா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா்.எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பல்லி, மேலப்பட்டு கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
அப்போது அவா், நகரங்களைப் போல கிராமப்புற மக்களுக்கும் மருத்துவச் சேவை கிடைக்கவே, முதல்வரின் கனவுத் திட்டமான அம்மா மினி கிளினிக் சேவையை தமிழக முதல்வா் அண்மையில் தொடக்கிவைத்தாா். அப்போது தமிழகம் முழுவதும் 2000 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் எனவும், முதல் கட்டமாக 630 மருத்துவமனைகள் தொடங்கப்படும் எனவும் முதல்வா் அறிவித்தாா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 73 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படவுள்ளன. அவைகளில் 23 மருத்துவமனைகள் தொடங்க திட்டமிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச.20) பல்லி, மேலப்பட்டு கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி.துரை, நிா்வாகிகள் டி.பி.துரை, எஸ்.திருமூலன், பாஸ்கா் ரெட்டியாா், சுரேஷ் நாராயணன், ஜி.கோபால், கோவிந்தராஜ், கன்னியப்பன், செபாஸ்டின்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.