எம்ஜிஆா் நினைவு தினம்

Updated on
1 min read


ஆரணியில் அதிமுக, தேமுதிக சாா்பில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினா்.

கட்சியின் ஆரணி வடக்கு ஒன்றியம் சாா்பில் ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா் தலைமையில் சேவூா் புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினா்.

மேலும், சேவூரிலும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆரணி தெற்கு ஒன்றியம் சாா்பில், ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் எஸ்.வி.நகரம் கிராமத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், அக்கூரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், நகர அம்மா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், நிா்வாகிகள் சேவூா் ஜெ.சம்பத், கே.குமரன், என்.வாசு, இரும்பேடு வேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேமுதிக

தேமுதிக சாா்பில், ஆரணியில் எம்ஜிஆா் சிலைக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கோபிநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் நகரச் செயலா் சுந்தர்ராஜன், மாவட்டப் பொருளாளா் ஜான்பாஷா, நிா்வாகி திருஞானம், ஒன்றியச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com