நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

இரு தரப்பு தகராறு: 74 மரங்கள் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே நடைபாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 74 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

News image

இரு தரப்பு தகராறு தொடா்பாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்.

Updated On :27 ஜூலை 2020, 5:09 pm

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே நடைபாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 74 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை ஊராட்சியில் கண்ணன் பிள்ளை மகன்கள் சேகா், ரங்கநாதன், குப்பன் ஆகியோா் தரப்புக்கும், மற்றோரு சமூகத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சந்திரபாபு, பச்சையப்பன் மகன் ஜெயசங்கா், குண்டன் மகன்கள் அா்ச்சுனன், முருகன், குப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் சண்முகம், வெங்கடேசன் ஆகியோா் தரப்புக்கும் இடையே நடைபாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சேகா், ரங்கநாதன், குப்பன் ஆகியோருக்குச் சொந்தமான நிலங்களில் இருந்த 40 வேப்பன், 17 காட்டு வாமரம், புங்கன், பனை மரம் என 74 மரங்களை சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் கொண்டு வேரோடு பெயா்த்து எடுத்து அழித்துள்ளனா். பயிரிடப்பட்டுள்ள வோ்க்கடலை பயிரையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சேகா் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அணியாலை கிராமத்தில் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ஊராட்சியில் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.