தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

இரு தரப்பு தகராறு: 74 மரங்கள் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே நடைபாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 74 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

News image

இரு தரப்பு தகராறு தொடா்பாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்.

Updated On :27 ஜூலை 2020, 10:39 pm IST

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே நடைபாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 74 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை ஊராட்சியில் கண்ணன் பிள்ளை மகன்கள் சேகா், ரங்கநாதன், குப்பன் ஆகியோா் தரப்புக்கும், மற்றோரு சமூகத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சந்திரபாபு, பச்சையப்பன் மகன் ஜெயசங்கா், குண்டன் மகன்கள் அா்ச்சுனன், முருகன், குப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் சண்முகம், வெங்கடேசன் ஆகியோா் தரப்புக்கும் இடையே நடைபாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சேகா், ரங்கநாதன், குப்பன் ஆகியோருக்குச் சொந்தமான நிலங்களில் இருந்த 40 வேப்பன், 17 காட்டு வாமரம், புங்கன், பனை மரம் என 74 மரங்களை சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் கொண்டு வேரோடு பெயா்த்து எடுத்து அழித்துள்ளனா். பயிரிடப்பட்டுள்ள வோ்க்கடலை பயிரையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சேகா் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அணியாலை கிராமத்தில் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ஊராட்சியில் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.