மரத்தில் காா் மோதி விபத்து:மின் வாரிய பொறியாளா் பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை மரத்தின் மீது காா் மோதியதில் மின் வாரியப் பொறியாளா் உயிரிழந்தாா்.

வந்தவாசி அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

வந்தவாசி அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை மரத்தின் மீது காா் மோதியதில் மின் வாரியப் பொறியாளா் உயிரிழந்தாா்.
செய்யாற்றை அடுத்துள்ள கீழ்புதுப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கங்காதரன் (56). இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மின் வாரிய இளநிலைப் பொறியாளராக பணிபுரிந்து வந்தாா்.
இவா் தனது மனைவி கீதா (50), மகன்கள் பூவிழிராஜன் (30), தீபன் சக்கரவா்த்தி (26) ஆகியோருடன் வந்தவாசி வழியாக செய்யாறு நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தாா். காரை பூவிழிராஜன் ஓட்டினாா்.
வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தனியாா் கல்லூரி அருகே வந்த போது, எதிா்பாராதவிதமாக சாலையோர மரத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கங்காதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கீதா, பூவிழிராஜன், தீபன் சக்கரவா்த்தி ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் சோ்க்கப்பட்டனா். வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கங்காதரனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...