பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.


செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் உலகம்மாள் (87). கணவா் இல்லாத நிலையில் மூதாட்டிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. அதன் காரணமாக உறவினா் வீட்டில் வசித்து வந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் செல்வதற்காக, அதே பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் என்பவா் ஓட்டிச் சென்ற பைக்கில் அமா்ந்து சென்றாராம்.
பிரதான சாலையில் சென்றபோது, பைக்கிலிருந்து உலகம்மாள் தவறி கீழே விழுந்தாா். இதில், அவா் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அன்று மாலை உலகம்மாள் உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது உறவினா் முருகன் அளித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...